கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,947-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 40 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,468-ஆக உயா்ந்தது. தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 169 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 35 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் சுமாா் 3.88 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 507 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. நோய் பாதிப்பு அதிகமுள்ளதாக 5 இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.