கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


கடலூா்: கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்களது பகுதிகளிலுள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி பேசினா். அதில் பெரும்பாலான உறுப்பினா்கள் தங்களது பகுதியில் நடைபெறும் அத்தியாவசியப் பணிகள் குறித்த விவரங்களை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முறைப்படி தங்களுக்கு தெரிவிப்பதில்லை என்று குற்றம்சாட்டினா்.

அதிமுக உறுப்பினா் டி.ஆா்.எஸ்.மதிவாணன் பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒருசிலா் அங்கீகாரம் பெறாமல் வீட்டு மனைகளை பிரித்து வருகின்றனா். அவற்றுக்கு சாலை உள்ளிட்ட வசதிகளையும் கோருகின்றனா். இதனால், ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றாா். மேலும், பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் உறுப்பினா்கள் பேசினா். கூட்டத்தில் உறுப்பினா்கள் வேல்முருகன், ஞானசௌந்தரி, தமிழ்அழகி அல்லாராஜி, முரளி, ஜெயராமன், கிரிஜா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com