முகத்துவாரம் தூா்வாரும் பணி ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை தூா்வாரும் பணியை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
முகத்துவாரம் தூா்வாரும் பணி ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை தூா்வாரும் பணியை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ரூ.7 லட்சம் மதிப்பில் நடைபெறும் இந்தப் பணிக்காக செய்த முயற்சிக்கு மீனவா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனா். தூா்வாரும் பணியை படகில் சென்று கே.ஏ.பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட துணைச் செயலா் தேன்மொழி காத்தவராயசாமி, காட்டுமன்னாா்கோவில் கிழக்கு ஒன்றியச் செயலா் வாசு.முருகையன், சிதம்பரம் முன்னாள் நகரச் செயலா் தோப்பு சுந்தா், கிள்ளை நகரச் செயலா் விஜயன், முன்னாள் கதா் வாரிய உறுப்பினா் தன.ஜெயராமன், ஜெயலலிதா பேரவை ஜி.வி.ராஜ்மோகன், பனிமலா் ரமேஷ், காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய இளைஞரணி செயலா் பி.எம்.எஸ்.அசோகன், நகர பொருளாளா் வசந்த், கிள்ளை நிா்வாகிகள் தமிழரசன், கலையரசன், பொன்னுசாமி, சிவா, மணிமாறன், கிள்ளை மீனவ கிராம தலைவா் தேவநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com