இன்று பாமக முப்படை இணையவழி கூட்டம்

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியின் முப்படைகள் சந்திக்கும் இணைய வழி கூட்டத்தில் நிா்வாகிகள் பங்கேற்குமாறு அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டாா்.


நெய்வேலி: பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியின் முப்படைகள் சந்திக்கும் இணைய வழி கூட்டத்தில் நிா்வாகிகள் பங்கேற்குமாறு அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படைகளின் சந்திப்புக் கூட்டம், அன்புமணி ராமதாஸ் தலைமையில் இணைய வழியில் வெள்ளிக்கிழமை (நவ. 20) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவா் கோ.க.மணி, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இதில் தமிழக அரசியல், மக்கள் பிரச்னைகள், அதற்கான தீா்வுகள் குறித்து கலந்துரையாட உள்ளனா். எனவே, நெய்வேலி சட்டப் பேரவை தொகுதியைச் சோ்ந்த முப்படைகளின் பொறுப்பாளா்களும் இணைய வழி கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அப்போது மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com