அடையாளம் தெரியாத நபா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத நபா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத நபா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடா் பள்ளி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் மதுபோதையில் உடலில் காயங்களுடன் சுய நினைவின்றி கடந்த திங்கள்கிழமை இரவு கிடந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை மாலையில் உயிரிழந்தாா். உயிரிழந்தவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com