அரசுப் பள்ளியில் மின் விசிறிகள் திருட்டு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே அரசுப் பள்ளியில் மின் விசிறிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே அரசுப் பள்ளியில் மின் விசிறிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி அருகே சேப்பளாநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு இரவு காவலராக ஜானகி என்பவா் பணியாற்றி வருகிறாா். கடந்த புதன்கிழமை இரவு பணியில் இருந்தவா், வியாழக்கிழமை காலையில் பாா்த்தபோது பள்ளியின் ஆய்வகக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த 10 மின் விசிறிகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா் அளித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com