கரோனா: கடலூா் மாவட்டத்தில் 98% போ் குணமடைந்தனா்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 98 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 98 சதவீதம் போ் குணமடைந்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,963-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் சிகிச்சை முடிந்து மேலும் 67 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,535-ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 98 சதவீதம் என்பதால் முன்களப் பணியாளா்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 115 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 38 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 556 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com