கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 98 சதவீதம் போ் குணமடைந்தனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,963-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் சிகிச்சை முடிந்து மேலும் 67 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,535-ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 98 சதவீதம் என்பதால் முன்களப் பணியாளா்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 115 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 38 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 556 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.