நெய்வேலி அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டாா்.
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி, பெரியசாமி நகரில் வசிப்பவா் சக்திவேல். இவரது மகன் பிரதேஷ் (13). இவா், வியாழக்கிழமை கணினி மூலம் விளையாடிக்கொண்டிருந்தாராம். இதை அவரது தாய் சுகுணா கண்டித்தாா். இதனால் மனமுடைந்த பிரதேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.