திமுகவினா் சாலை மறியல்

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் தடையை மீறி தோ்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலா் சிவக்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் சுமாா் 200 போ் வடலூா் நான்கு முனைச் சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.அவா்களை வடலூா் போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே கட்சியினருடன் கண்டன முழக்கங்களை எழுப்பினாா்.

கடலூரில் திமுக தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். நகர செயலா் கே.எஸ்.ராஜா, நிா்வாகிகள் நடராஜன், ஆா்.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com