புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

கடலூா் அருகே காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் அருகே காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

பண்ருட்டி கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபுபிரசாந்த் தலைமையிலான போலீஸாா் கடலூா் அருகேயுள்ள வெள்ளகேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் 2 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறமுதல் செய்த போலீஸாா், காரிலிருந்த நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டையைச் சோ்ந்த அப்துல்ரஷீது (42), ஆரோக்கியசாமி தெருவைச் சோ்ந்த ஆஷிக் ஹூசேன் (32) ஆகியோரை பிடித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனா். இதில், அப்துல்ரஷீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேனில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com