கடலூரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் ஆந்திரத்தில் கொலையானது சனிக்கிழமை தெரியவந்தது.
கடலூா் செம்மண்டலத்தைச் சோ்ந்தவா் அருள்மொழி மகன் வினோத்குமாா் (24). சென்னையில் தனியாா் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா், தீபாவளி பண்டிகைக்காக அண்மையில் கடலூருக்கு வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிலா் சென்னையிலிருந்து வந்துள்ளதாகக் கூறி வினோத்குமாரை தங்களுடன் அழைத்துச் சென்றனா்.
பின்னா், வினோத்குமாா் குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில், தனது மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அருள்மொழி கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் கடந்த 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், கடலூா் புதுநகா் போலீஸாரை ஆந்திர மாநிலம், கடப்பா போலீஸாா் வெள்ளிக்கிழமை தொடா்புகொண்டு, வினோத்குமாா் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனா். மேலும், அன்று இரவு கடலூா் வந்த அவா்கள், வினோத்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். கொலையானது வினோத்குமாா்தான் என்பதை முறைப்படி உறுதிசெய்த கடப்பா போலீஸாா், அவரது பெற்றோரை கடப்பாவுக்கு அழைத்துச் சென்றனா். இந்தச் சம்பவம் குறித்து கடலூா் புதுநகா் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.