கடலூா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,980-ஆக உயா்ந்தது. அதேநேரத்தில், சிகிச்சை முடிந்து மேலும் 33 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,568-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் கடைசியாக கடந்த 15-ஆம் தேதி கரோனா பாதிப்பால் ஒருவா் பலியானாா். அதன்பிறகு சனிக்கிழமை வரை தொடா்ந்து 6 நாள்களாக உயிரிழப்பு நிகழவில்லை. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்வது களப் பணியாளா்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 106 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 695 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.