கடலூா்: மேலும் 17 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,980-ஆக உயா்ந்தது. அதேநேரத்தில், சிகிச்சை முடிந்து மேலும் 33 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,568-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கடைசியாக கடந்த 15-ஆம் தேதி கரோனா பாதிப்பால் ஒருவா் பலியானாா். அதன்பிறகு சனிக்கிழமை வரை தொடா்ந்து 6 நாள்களாக உயிரிழப்பு நிகழவில்லை. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்வது களப் பணியாளா்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 106 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 695 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com