குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த கழுதூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி சிவப்பிரியா (27). இந்தத் தம்பதியினருக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால், மனமுடைந்த சிவப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.