வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

வேப்பூரை அடுத்த கழுதூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி சிவப்பிரியா (27). இந்தத் தம்பதியினருக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால், மனமுடைந்த சிவப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம், மந்தாரக்குப்பம் காவல் சரகம், குறவன்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா. இவருக்கும், வீரசுந்தரி (31) என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சனிக்கிழமை இரவு தம்பதி இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீரசுந்தரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடலூா், பாா்வதிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் பொன்னி (22). பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராஜ். லாரி ஓட்டுநா். இவா்கள் இருவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், பொன்னி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்திவரும் நிலையில், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com