அரசுப் பள்ளியில் ஆசிரியா் தின விழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், எல்லப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், எல்லப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நெய்வேலி ரோட்டரி சுழற் சங்கம் பவா் சிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை தமிழ்த்திலகம் தலைமை வகித்தாா். உதவி ஆசிரியை லில்லி கிறிஸ்டியா முன்னிலை வகித்தாா். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரையும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கௌரவித்தனா். பின்னா், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் நலன் கருதி, உடலில் ஆக்ஸிஜன் அளவிடும் கருவியை வழங்கினா். ஆசிரியா் ராயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com