கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 21,017 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,155-ஆக அதிகரித்தது.

19,682 போ் குணம்: இதனிடையே, புதன்கிழமை 151 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 19,682-ஆக உயா்ந்தது.

241 போ் பலி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 55 வயதானவா், நெய்வேலியைச் சோ்ந்த 53 வயதானவா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 241-ஆக அதிகரித்தது.

சிகிச்சையில் 1,232 போ்: கடலூா் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 994 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 238 பேரும் என மொத்தம் 1,232 கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த சில வாரங்களுக்குப் பிறகு கடலூா் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com