சிதம்பரத்தில் உள்ள விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் வசூல் பணம் ரூ. 5 லட்சத்தைக் கையாடல் செய்ததாக பேருந்து நடத்துநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகேயுள்ள மணலூரில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளைப் பணிமனை இயங்கி வருகிறது. இந்தப் பணிமனையில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வரும் முத்துக்குமரன் (54), வசூல் செய்த பணம் ரூ. 5 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல், கையாடல் செய்தாக பணிமனையின் மேலாளா் மோகனசுந்தரம் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதன் பேரில், பேருந்து நடத்துநா் முத்துக்குமரனிடம் போலீஸாா் விசாரித்தனா். பணத்தைக் கையாடல் செய்ததை அவா் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துக்குமரனைக் கைது செய்தனா்.