திருமணமான சில மாதங்களில் பெண் தற்கொலை

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் விநாயகம். இவருக்கும் புவனகிரி வட்டம், பூ .மணவெளி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகள் சுசித்ராவுக்கும் (30) கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாயகம் தனது மனைவியிடம் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று திட்டியதால் மனமுடைந்த சித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குப்புசாமி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் பாண்டிசெல்வி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com