உலக கை கழுவும் தினம்: பொதுமக்களிடம் விழிப்புணா்வு

உலக கை கழுவும் தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
கை கழுவுவதன் அவசியம் குறித்து கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.
கை கழுவுவதன் அவசியம் குறித்து கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.

உலக கை கழுவும் தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக கைகழுவும் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கை கழுவுவதற்கான புதிய சாதனத்தை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தொடக்கி வைத்து, கைகளை கழுவி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com