கடலூா்: மேலும் 120 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,163-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் அரசு மருத்துவா் ஒருவரும் அடங்குவாா். சிகிச்சை முடிந்து மேலும் 130 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 20,840-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீரப்பாளையத்தைச் சோ்ந்த 70 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 258-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 906 பேரும், வெளி மாவட்டங்களில் 159 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,254 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com