நெய்வேலி அருகே மயங்கி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நெய்வேலி வட்டம்-29 பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் சேகா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு புறப்பட்டுச் சென்றாா். 2-ஆம் சுரங்கம் அருகே காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகா், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் சேகரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.