மயங்கி விழுந்த தொழிலாளி பலி

நெய்வேலி அருகே மயங்கி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி அருகே மயங்கி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி வட்டம்-29 பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் சேகா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு புறப்பட்டுச் சென்றாா். 2-ஆம் சுரங்கம் அருகே காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகா், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் சேகரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com