கடலூா்: மேலும் 116 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,280-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், கா்ப்பிணியும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 126 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 20,966-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,59,374-ஆக உள்ளது.

அதே நேரத்தில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 58 வயது ஆண், கடலூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 72 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 260-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 920 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 134 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,029 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com