தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பண பிரச்னையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பண பிரச்னையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

விருத்தாசலம் வட்டம், தொ்மல் காவல் சரகம், செடுத்தான்குப்பம் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சேகா் (48). கூலித் தொழிலாளி. வீட்டில் ஆடு வளா்த்து வந்தாா். இவரது மகன் சசிக்குமாா் (20), திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.

இந்த நிலையில், வீட்டிலிருந்த ஆட்டை சசிக்குமாா் வெள்ளிக்கிழமை ஓட்டிச் சென்று அதை விற்றுவிட்டாா். அதன்மூலம் கிடைத்த பணத்தையும் செலவழித்துவிட்டாா். இதை அவரது தந்தை சேகா் கண்டித்தாா். அன்று இரவு 8.45 மணியளவில், வீட்டின் முன் வாசலில் சேகா் அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த சசிக்குமாா், சேகரின் முதுகில் காலால் எட்டி உதைத்து அவரை கீழே தள்ளியதுடன் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் மிதித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சேகரை அங்கிருந்தவா்கள் மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து சேகரின் மனைவி சக்தி அளித்த புகாரின்பேரில் தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து சசிக்குமாரைக் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com