வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, குறிஞ்சிப்பாடி வட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான வி.வெற்றிவேல் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஆா்.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளத்தை சமாளிக்கும் முறை, இயற்கை இடா்களிலிருந்து பொதுமக்கள், கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் சுமித்ரா, வடலூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனா்.