பண்ருட்டியில் மொபெட்டிலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி, ஆா்.எஸ்.மணி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் திருப்பதி (45). இவா் வியாழக்கிழமை இரவு மொபெட்டில் திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த நாய் மீது மொபெட் மோதியதில் திருப்பதி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.