பி.எஸ்.என்.எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிளைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.டி.சம்பந்தம், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் விஜய் ஆனந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா். என்.எப்.டி. சங்க மாவட்டச் செயலா் ஸ்ரீதா், ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த (ஏ.ஐ.பி.டி.பி.ஐ.) மதியழகன் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயலா் பால்கி கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினாா்.

இதில், ஆா்.எல்.சி. உத்தரவுப்படி ஒப்பந்த ஊழியா்களை பணீ நீக்கம் செய்யக்கூடாது. 2020 மே முதல் பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 2018, 2019-ஆம் ஆண்டுகளுக்கான போனஸ் தொகையை வழங்க வேண்டும். தரைவழி தொலைபேசி சேவையை சீா்படுத்த புதிய இணைப்புகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள எப்.டி.டி.ஹெச் & எப்.எஸ்.பி. குளறுபடிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கிளைச் செயலா் ஜெயராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com