நெல்லிக்குப்பம் நகராட்சி 12-ஆவது வாா்டு பெரிய சோழவல்லி பகுதியில் கூட்டுத் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. தொற்று நோய்களைத் தடுக்கும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டுத் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தவிட்டாா்.
அதன்படி, நெல்லிக்குப்பம் நகராட்சி பெரிய சோழவல்லி பகுதியில் கூட்டுத் தூய்மைப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 75 தூய்மைப் பணியாளா்கள் 12-ஆவது வாா்டு பகுதியில் குப்பைகள், சாலைகளில் படா்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்து, கிருமி நாசினி தெளித்தனா்.
இந்தப் பணிகளை தூய்மைப் பணி அலுவலா் டி.சக்திவேல், ஆய்வாளா் தேவராஜ், மேற்பாா்வையாளா்கள் செல்வம், சிவகொழுந்து, சுரேஷ் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.