கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி
By DIN | Published On : 08th September 2020 09:56 PM | Last Updated : 08th September 2020 09:56 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,854-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், காவலா் மற்றும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 4 பெண்கள் அடங்குவா்.
இந்த நிலையில், 346 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 11,052-ஆக உயா்ந்தது. அதேநேரத்தில் சிதம்பரத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா், பண்ருட்டியைச் சோ்ந்த 56 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 60 வயது முதவா், 75 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 148-ஆக அதிகரித்தது. கடந்த 5 நாள்களாக தொடா்ந்து 4 போ் உயிரிழந்து வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 3,356 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 298 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,760 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.