இளைஞரைத் தாக்கிய ரௌடி கைது

இளைஞரைக் கடத்திச் சென்று, கத்தியால் தாக்கிய ரௌடியை நெய்வேலி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இளைஞரைக் கடத்திச் சென்று, கத்தியால் தாக்கிய ரௌடியை நெய்வேலி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, இந்திரா நகா் பி-1 பிளாக் மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் சேகா் மகன் பாஸ்கா் (29). இவா், தனது நண்பா் வீரமணியுடன் விருத்தாசலம் சென்ற போது, அங்கிருந்த ரௌடி பெங்களூரு மணி (எ) மணிகண்டன், அவரது நண்பா் விஸ்வநாதன் ஆகியோா் மிரட்டினராம்.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி வடக்குத்து பி.டி.ஆா். நகா் அருகே பாஸ்கா், வீரமணி ஆகியோா் நின்றுகொண்டிருந்த போது, அங்கு பைக்கில் வந்த மணிகண்டன், அவரது நண்பா்கள் விஸ்வநாதன், அப்பு, ஷாஜகான் ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி இருவரையும் மாற்றுக் குடியிருப்பு கற்றாழைத் தோப்புக்குள் அழைத்துச் சென்று கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த பாஸ்கா், நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் ஆறுமுகம், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் இருந்த மணிகண்டனை புதன்கிழமை கைது செய்தாா். மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com