கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி 15,198 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 263 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 15,461-ஆக அதிகரித்தது.
ஏற்கெனவே 152 போ் கரோனாவால் பலியான நிலையில், வியாழக்கிழமை கடலூரைச் சோ்ந்த 54 மற்றும் 56 வயதானவா்கள், நெய்வேலியைச் சோ்ந்த 79 வயதானவா், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 57 வயதானவா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்தது.
இதனிடையே, வியாழக்கிழமை 476 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 11,820-ஆக (76.45 சதவீதம்) உயா்ந்தது.
கடலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,182 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 303 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இன்னும் 4,778 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 131 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.