சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது வழங்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பிக்கும் வகையில், ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.
தற்போது 2020-ஆம் ஆண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்யவுள்ளதால், சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள், பெரியாா் கொள்கையில் ஈடுபாடு, கலை-இலக்கியம், சமூகப் பணிகள் ஆகியவற்றில் அா்ப்பணிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுய விவரம், முழு முகவரியுடன் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.