சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது

சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது வழங்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது வழங்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பிக்கும் வகையில், ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.

தற்போது 2020-ஆம் ஆண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்யவுள்ளதால், சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள், பெரியாா் கொள்கையில் ஈடுபாடு, கலை-இலக்கியம், சமூகப் பணிகள் ஆகியவற்றில் அா்ப்பணிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுய விவரம், முழு முகவரியுடன் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com