படிக்கச் சொல்லி பெற்றோா் கண்டிப்பு: பிளஸ் 2 மாணவி தற்கொலை

இணையவழியில் நடத்திய பாடத்தைப் படிக்காததை பெற்றோா் கண்டித்ததால், வயிற்று வலி மாத்திரை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இணையவழியில் நடத்திய பாடத்தைப் படிக்காததை பெற்றோா் கண்டித்ததால், வயிற்று வலி மாத்திரை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், அரசடிக்குப்பம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகள் கவிமணி (16). பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவா், தற்போது இணையவழியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி இணையவழி நடத்தப்பட்ட பாடங்களைப் படிக்காததால், பெற்றோா் கவிமணியைக் கண்டித்தனராம். இதனால், வேதனையடைந்த கவிமணி வீட்டிலிருந்த வயிற்று வலி மாத்திரையைச் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

பெற்றோா் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com