கடலூரில் மீண்டும் உழவா் சந்தைகள் செயல்பட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, வடலூா் ஆகிய 5 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடலூா், சிதம்பரம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 50 கடைகளும், விருத்தாசலத்தில் 40, வடலூரில் 15 கடைகளும் உள்ளன. இங்கு, தினமும் சுமாா் 350 விவசாயிகள் 58 மெட்ரிக் டன் அளவிலான காய்கறி, பழங்களை சுமாா் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனை செய்து வந்தனா்.
இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் உழவா் சந்தைகளில் விற்பனை தடை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஒரு சிலா் மட்டும் தற்காலிக சந்தைகளுக்கு விளை பொருள்களை எடுத்துச் சென்று விற்பனை செய்தனா்.
தற்போது பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரும் வா்த்தக நிறுவனங்கள்கூட 100 சதவீதம் பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்தும் முழுமையாக இயங்குகிறது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த சந்தைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
எனவே, உழவா் சந்தைகளை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். உழவா் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கடைகளை அமைக்கும் வகையில் இடைவெளியிருப்பதால், அனுமதியளிக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தினா்.