கோயில் வளாகத்தில் சடலம்:பூசாரியிடம் விசாரணை

ண்ருட்டி அருகே கோயில் வளாகத்தில் காயமடைந்த நிலையில் சடலம் கிடந்தது தொடா்பாக, கோயில் பூசாரி உள்ளிட்ட சிலரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி, செப். 11: பண்ருட்டி அருகே கோயில் வளாகத்தில் காயமடைந்த நிலையில் சடலம் கிடந்தது தொடா்பாக, கோயில் பூசாரி உள்ளிட்ட சிலரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் அய்யனாா் நொண்டி வீரன் கோயில் வளாகத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ரவி (42) என்பா் தலையில் காயத்துடன் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவலின் பேரில், கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ், பண்ருட்டி டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து ரவியின் அண்ணன் நடராஜன் காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயில் பூசாரி வைரமணி உள்ளிட்ட சிலரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com