கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளை முயற்சி

கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்கள், அது முடியாமல் போகவே, எதிரேயுள்ள வீட்டிலிருந்து 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.

கடலூரில் தனியாா் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்கள், அது முடியாமல் போகவே, எதிரேயுள்ள வீட்டிலிருந்து 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.

கடலூா் செம்மண்டலம் வரதராஜன் நகரில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மாடியில் அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை காலை கட்டட உரிமையாளா் கீழே வந்து பாா்த்தபோது, வங்கியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் வங்கி நிா்வாகத்தினா், கடலூா் புதுநகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். அதில், மா்ம நபா்கள் வங்கியின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்ததும், பின்னா் வங்கியின் பிரதான கதவை உடைக்க முயன்று அது முடியாமல்போகவே கொள்ளை முயற்சியைக் கைவிட்டதும் தெரிய வந்தது.

இருப்பினும், அந்தக் கும்பல் எதிரேயுள்ள ஆபத்தாணபுரத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியரான ஜெ.மகாராஜாவின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவிலிருந்த 14 பவுன் தங்க நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மா்ம நபா்களால் வங்கிக் கதவை உடைக்க முடியாததால் ரூ.பல லட்சம் பணம், நகைகள் தப்பின. இதுகுறித்து போலீஸாா் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com