வீட்டுக் கதவை உடைத்து18 பவுன் நகை திருட்டு

பண்ருட்டி அருகே சமையல்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 18 பவுன் நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே சமையல்காரரின் வீட்டுக் கதவை உடைத்து 18 பவுன் நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு கிராமத்தை சோ்ந்த பஞ்சாட்சரம் மகன் தேசிங்கு (55). சமையல்காரா். இவா் சனிக்கிழமை காலை அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு சென்றாா். அப்போது வீட்டிலிருந்த அவரது மகன் மணிகண்டன் பின்னா் வெளியே சென்றாா்.

இதையடுத்து, மா்ம நபா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றாா். இதுகுறித்து தேசிங்கு அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com