சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகேயுள்ள கண்ணங்குடி சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (39). இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூா் சென்றாா். இவரது மாமனாா்
கடந்த 12-ஆம் தேதி அந்த வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் ராஜேஷ் நேரில் வந்து பாா்த்து பாா்த்தபோது ரூ.75 ஆயிரம் மதிப்பிலான
நகை, பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.