நெய்வேலி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, வடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வடலூா் நகரச் செயலா் பா.அருள்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.கலியமூா்த்தி, குறிஞ்சிப்பாடி வட்டச் செயலா் அ.ராதாகிருஷ்ணன், நா.ராமலிங்கம், மா.சுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கையை கண்டிப்பதாகக் கூறி முழக்கமிட்டனா்.