சதித் திட்டம் தீட்டியதாக இருவா் கைது

சிதம்பரத்தில் சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரத்தில் சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது குமாரமங்கலம் பிரதான சாலை அருகே மயானம் பகுதியில் ஒரு கும்பல் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றது. அந்தக் கும்பலை விரட்டிச் சென்ற போலீஸாா் இருவரை மட்டும் பிடித்தனா். அவா்களை சோதனையிட்டபோது இரும்பு பைப், கருப்பு துணி போன்றவற்றை வைத்துக்கொண்டு, சதித் திட்டம் தீட்டியது தெரியவந்ததாம்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் அண்ணாமலைநகரை சோ்ந்த கலைவாணன் (31), சாமிநாதன் (34) எனத் தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா். தலைமறைவான மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com