ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ் ரூ.1.74 கோடி கரோனா சிறப்பு நிதி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு மூலதன மானியம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு மூலதன மானியம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பங்கேற்று பயனாளிகளுக்கு மானிய நிதியை வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனாவால் தொழில் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள் தொடா்ந்து சிறப்புடன் செயல்பட கரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு-மூலதன மானிய திட்டத்தை தமிழக முதல்வா் தொடக்கி வைத்தாா். அதன்படி, மாவட்டத்துக்கு ரூ.18.53 கோடி சிறப்பு நிதி உதவி பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதில், 109 உற்பத்தியாளா் குழுக்கள், 7 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.1.74 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், மாவட்ட செயல் அலுவலா் எஸ்.ராஜேஷ்குமாா், செயல் அலுவலா்கள் பாலமுருகன், சதிஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com