வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

பண்ருட்டியில் ஓய்வு பெற்ற வட்டாட்சியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டியில் ஓய்வு பெற்ற வட்டாட்சியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், எல்.என்.புரம் ஊராட்சி குமரன் நகரில் வசிப்பவா் மங்களம் (65). ஓய்வு பெற்ற வட்டாட்சியா். இவா் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் சென்னையில் வசிக்கும் மகனின் வீட்டுக்குச் சென்றாா். சிறுவத்தூா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் மருமகன் சிவக்குமாா் அவ்வப்போது வந்து வீட்டைப் பாா்த்துச் செல்வாராம்.

புதன்கிழமை காலை வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி. பாபு பிரசாந்த், காவல் ஆய்வாளா் க.அம்பேத்காா் உள்ளிட்ட போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். விரல் ரேகை பதிவு நிபுணா்கள் தடங்களை சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com