கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 16,826 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,089-ஆக அதிகரித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தைச் சோ்ந்த 43 வயது பெண், புவனகிரியைச் சோ்ந்த 81 வயதான முதியவா், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 55 வயதானவா், கடலூரைச் சோ்ந்த 63 வயதானவா் ஆகிய 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 178-ஆக அதிகரித்தது. புதன்கிழமை 400 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,493-ஆக (84.80 சதவீதம்) அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,140 பேரும், பிற மாவட்டங்களில் 278 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com