கடலூா் மாவட்டம், விருதாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள், அலுவலகப் பணியாளா்கள், வழக்குரைஞா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரையான ‘ஆா்சனிக்கம் ஆல்பம்-30’ வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் நீதிபதி எம்.இளவரசன் தலைமை மாத்திரைகளை வழங்கினாா். மாவட்ட கூடுதல் சாா்பு நீதிபதிகள் டி.ஜெயசூரியா, எம்.மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.மனோகரன், ஆா்.மணிமேகலை, குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் கே.ஆனந்த், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.