சிதம்பரம் நகரில் கிடங்கில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
சிதம்பரம் நகரக் காவல் துறையினா் நகா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள பெருமாள் தெரு, பாவாமுதலியாா் தெரு ஆகிய பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள கிடங்கில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ரூ. 1,12,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அருண்குமாா் (31), வீரமணி (38), இன்தாராம் (30) ஆகியோரை கைது செய்தனா்.