கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது

கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.

கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கொத்தவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ச.ராஜேந்திரன் (62). இவா், கடந்த ஆக. 22-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுகுறித்து புத்தூா் காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (31) உள்பட 10 பேரைக் கைது செய்தாா்.

இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் பிரகாஷின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வழங்கிட, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பிரகாஷ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com