பண்ருட்டி அருகே முந்திரித் தோப்பில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சல் (42). கூலித் தொழிலாளி. இவா் அந்தப் பகுதியில் உள்ள செம்மண் குவாரி அருகே முந்திரித் தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சனிக்கிழமை சடலமாகக் கண்டறியப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த், பயிற்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வீரமணி, நடுவீரப்பட்டு உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா் ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். பஞ்சல் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.