சிதம்பரம் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே நாஞ்சலூா் பகுதியில் விதிகளை மீறி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆய்வுசெய்த தாலுகா போலீஸாா், செந்தில்நாதன் (48) என்பவரது வீட்டை சோதனையிட்டனா். அப்போது, வீட்டின் பின்புறம் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்து 10 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், செந்தில்நாதனை கைது செய்தனா்.