பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராம் சுந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க செயல் தலைவா் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், செயலா் சி.ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.