சிதம்பரம் சம்பந்தகாரத் தெரு அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத விழா அண்மையில் நடைபெற்றது.
கீரப்பாளையம் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுடா்க்கொடி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வேலாயுதம், திட்ட உதவியாளா் நா்மதா, திருக்கோதை, இந்திரா, சகுந்தலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில் ஊட்டச்சத்து மிகுந்த பலவிதமான உணவுப் பொருள்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் எடை, உயரம் பரிசோதிக்கப்பட்டது. விழாவில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.